சமையல் குறிப்புகள்
சாத வகைகள்

புதினா சாதம்

தேவையான பொருட்கள்

சாதம் - 2 கோப்பை
பொதினா - ஒரு கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
முந்திரி - 5
எலுமிச்சை - 1/4 பழம்
நெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணை - 1 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. சிறிதளவு நெய்யில் பொதினாவை லேசாக வறுத்து, ஆறியவுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

2. பெரிய வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு சிவந்ததும், வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.

5. பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வதக்கவும்.

6. இதனுடன் அரைத்து வைத்துள்ள பொதினா விழுதைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும்.

8. பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம் குழையாமல் நன்றாகக் கிளறி அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.