சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சமையல் குறிப்புகள் |
சாத வகைகள் |
தேங்காய்ப்பால் புலாவ் ![]() தேவையான பொருட்கள் அரிசி - 1 குவளை (250 கிராம்) தேங்காய் துறுவல் - 1 கோப்பை பெரிய வெங்காய் - 1 லவங்கம் - 5 பட்டை - 2 (1 இஞ்ச் அளவு) ஏலக்காய் - 2 பிரியாணி இலை - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தயிர் - 3 தேக்கரண்டி பொதினா - 10 இலைகள் கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி (நறுக்கியது) கொத்தமல்லி - 1 தேக்கரண்டி (நறுக்கியது) நெய் - 3 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். 2. தேங்காய்த் துறுவலை மிக்ஸியில் மைய அரைத்து இருமுறை பால் (3 குவளை அளவுக்கு) எடுத்துக் கொள்ளவும். (1 குவளை அரிசிக்கு 3 குவளை தேங்காய்ப்பால்) 3. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலையை போட்டு தாளிக்கவும். 5. அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். 6. அதனுடன் பொதினா, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். 7. அனைத்தும் நன்கு வதங்கியதும் தயிரைச் சேர்த்து, ஒரு பிரட்டு பிரட்டியதும் உடனே தேங்காய்ப் பாலை சேர்க்கவும். 8. இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 9. கொதி வந்ததும், ஊற வைத்து வடிகட்டிய அரிசியை சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும். 10. குக்கரில் ஆவி அடங்கியதும் சாதம் குலையாதவாறு லேசாகக் கிளறி பரிமாறவும். குறிப்பு 1. பொதினா, கறிவேப்பில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு சேர்த்தாலும் வாசனையாகவே இருக்கும். 2. தேங்காய்ப் பால் எடுக்கும் போது சிறிது சுடு தண்ணீர் சேர்த்து அரைத்தால் பால் நன்றாக வரும். 3. புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, பாசுமதி அரிசி எதில் வேண்டுமானாலும் செய்யலாம். உபயோகிக்கும் அரிசிக்கு ஏற்றவாறு தண்ணீரை (தேங்காய்ப்பால்) சேர்ப்பது அவசியம். 4. அரிசி அதிகம் குலையாமல் பார்த்துக் கொள்ளவும். உபயோகிக்கும் அரிசிக்கு ஏற்றவாறு குக்கரில் விசில் விடவும். 5. இதற்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு குருமா நன்றாக இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |