சமையல் குறிப்புகள்
சூப் வகைகள்

பட்டாணி சூப்

தேவையான பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 2 பல்
எலுமிச்சம்பழச் சாறு - 1 மேஜைக் கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பூண்டு, இஞ்சி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பிறகு அதனுடன் 100 கிராம் அளவு பட்டாணி, மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

4. பின்னர் 300 மில்லி தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவிடவும்.

5. பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்துவிட்டு, காய்களை நன்கு அரைக்கவும்.

6. அரைத்த விழுதை தனியே வைத்துள்ள தண்ணீருடன் கலக்கவும். பின்னர் மீண்டும் வடிகட்டவும்.

7. அதனுடன் மிளகுத்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

8. மீதி உள்ள 50 கிராம் பட்டாணியை தனியே உப்பு போட்டு வேகவைத்து கடைசியாக சூப்பில் மிதக்கவிட்டுப் பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.