சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
துணைக் கறிகள் |
உருளைக்கிழங்கு மசாலா ![]() தேவையான பொருட்கள் உருளைக் கிழங்கு - 1/4 கிலோ பெரிய வெங்காயம் - 3 (பெரியது) பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ஒன்று இரண்டாக மசித்துக் கொள்ளவும். 2. வெங்காயத்தை நீள வாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். 4. தக்காளியைப் பொடியாக வெட்டிக் கொள்ளவும். 5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும். 6. பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, அதனுடன் வெட்டி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து வதக்கவும். 7. இதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கியவுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறி, 1 குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 8. கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும். குறிப்பு 1. கிழங்கை அதிகமாக மசித்துவிடாமல், கிழங்கு தெரியுமாறு ஒன்று இரண்டாக மசிக்க வேண்டும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |