ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்
எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் 2024ஆம் ஆண்டில் முதல் கட்டமாக 100 நூல்களை பல்வேறு நூல் பிரிவுகளில் வெளியிட உள்ளோம். ஆகவே நூலாசிரியர்கள் தங்களின் நூல்களைப் பதிப்பிக்க எம்மை தொடர்பு கொள்ளவும். பேசி/வாட்சப்: 9444086888 (தற்போது அச்சுக்கு தேர்வாகியுள்ள நூல்கள்: 5)

நிலவில் 'லேண்டர்' தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு - இஸ்ரோ
உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் கார்ல்சென்-பிரக்ஞானந்தா
தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு
லிபியாவில் ஆயுத கும்பல் சிறை பிடித்த 17 இந்தியர்கள் மீட்பு
பாகிஸ்தானில் லாரியில் குண்டு வெடித்து 11 தொழிலாளர்கள் பலி


சமையல் குறிப்புகள்
சூப் வகைகள்

கேரட் சூப்

தேவையான பொருட்கள்

கேரட் - 4
சின்ன வெங்காயம் - 10
மைசூர் பருப்பு - 2 மேஜைக் கரண்டி
பாசிப்பருப்பு - 2 மேஜைக் கரண்டி
பால் - 100 மில்லி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கேரட், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. குக்கரில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

3. மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

4. குக்கரில் ஆவி அடங்கியதும், வடிகட்டி, அரைத்து, பின்னர் மீண்டும் அதே வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து, உப்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.

5. பிறகு இதனுடன் காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை ஆகியவைச் சேர்த்து பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.